மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
2015ம் ஆண்டில் முன்னணியில் இருக்கும் நடிகையாக ஹன்சிகா இருக்கிறார். இந்த ஆண்டில் இவர் நடித்து ஏற்கெனவே 'ஆம்பள, ரோமியோ ஜுலியட், வாலு' ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'ரோமியோ ஜுலியட்' மட்டும் வெற்றிகரமாக ஓடியது. 'வாலு' படத்திற்குப் பிறகு ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள 'புலி' படம் நாளை வெளிவர உள்ளது. 'வேலாயுதம்' படத்திற்குப் பிறகு விஜய்யுடன் ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள 'புலி' படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி தன்னை இன்னும் முன்னணிக்குக் கொண்டு சேர்க்கும் என நம்புகிறார்.
'புலி' படத்திற்கப் பிறகு ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள 'அரண்மனை 2' படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து 'உயிரே உயிரே, உதயநிதியுடன் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஜீவாவுடன் நடிக்கம் 'போக்கிரி ராஜா' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாத அளவிற்கு தமிழிலேயே தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த ஆண்டிலாவது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்தார். இந்த ஆண்டில் அது கூட நடிக்கவில்லை.
மற்ற வட இந்திய நடிகைகளைக் காட்டிலும் ஹன்சிகா தமிழில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.