மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக இணையப் போகும் 'எந்திரன் 2' படத்தை '3 டி'யில் படமாக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ஹாலிவுட்டில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகும் 'சயின்ஸ் பிக்ஷன்' படங்களை '3டி'யில் படமாக்குவது கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால், அதற்காக அதிக பொருட்செலவும், கடும் உழைப்பும் தேவைப்படும். 'எந்திரன்' படத்தின் முதல் பாகத்தில் இருந்து 'எந்திரன் 2' வை ஹாலிவுட் திரையுலகமே வியக்கும் அளவிற்கு படமாக்க இயக்குனர் ஷங்கர் எண்ணி வருகிறாராம்.
ஹாலிவுட்டிற்கு சவால் விடும் அளவிற்கு இங்கும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பைக் கொடுத்தால் அந்த தரத்திற்கு நம்மாலும் ஒரு படத்தை உருவாக்க முடியும் என ஷங்கர் நினைப்பதாகச் சொல்கிறார்கள். இது சம்பந்தமான ஆலோசனை ஏற்கெனவே ஆரம்பமாகி நடைபெற்று வருகிறதாம். கடந்த பல மாதங்களாகவே இயக்குனர் ஷங்கர் அவருடைய குழுவினருடன் 'எந்திரன் 2' படத்தின் ஆலோசனையில் இருக்கிறார். 'பாகுபலி' படம் இந்திய சினிமாவின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. தொழில்நுட்ப விஷயத்தில் நாமும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்திருக்கிறது. அதை விட இன்னும் ஒரு பிரம்மாண்டமான படத்தைக் கொடுத்து 'பாகுபலி' சமயத்தில் 'ராஜமௌலியா, ஷங்கரா' என்ற விவாதம் வந்ததற்கு சரியான பதில் கொடுக்க வேண்டும் என்று ஷங்கர் நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படியோ தமிழில் ஷங்கர், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் பிரம்மாண்டமான 'எந்திரன் 2' படத்தை நாம் காணப் போகிறோம் என்பது மட்டும் நிச்சயம்.