ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆர்யா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்து வருகின்றன. 'புறம்போக்கு','வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க', 'யட்சன்' என ஆர்யா நடித்த 3 படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததால் அவரது நட்சத்திர நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இனி வரும் படங்களாவது வெற்றிப்படமாக இருந்தால்தான் ஆர்யாவால் தாக்குப்பிடிக்க முடியும். இல்லை என்றால் பரத், ஷாம், ஸ்ரீகாந்த் வரிசையில் ஆர்யாவும் சேர்ந்தவிடுவார் என்பது உறுதி. இந்த ஆபத்திலிருந்து தப்பித்தாக வேண்டுமே என்ற கவலையில் உள்ளாராம் ஆர்யா.
இந்நிலையில், 'அனேகன்' படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் ஆர்யாவிடம் கதை சொல்ல அணுகி இருக்கிறார். கதையைக் கேட்ட ஆர்யா உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். சமீபத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் 'தனி ஒருவன்'. 'ஜெயம்' ரவி கதாநாயகனாக நடித்த இப்படத்தை தொடர்ந்து 'ஏ.ஜி.எஸ்.' நிறுவனம் தயாரிப்பில் கேவி ஆனந்த் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில்தான் ஆர்யா நடிக்கிறார். ஏற்கெனவே அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து கே.வி.ஆனந்த் படம் இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. அந்த செய்திகளை மறுத்தார் கே.வி.ஆனந்த். ஆனால் ஆர்யாவை கே.வி.ஆனந்த இயக்க இருப்பது உறுதி என்றும், இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.