ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள படம் 'பத்து எண்றதுக்குள்ள'. கடந்த சில மாதங்களாக 'பத்து எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கின. தற்போது போஸ்ட்புரடக்ஷன்ஸ் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற விநாயக சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஷங்கரின் 'ஐ' படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம். 'கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதை மிகச்சரியாய் பயன்படுத்தி 'பத்து எண்றதுக்குள்ள'படத்தை பெரிய விலைக்கு பிசினஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது இப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில்'பத்து எண்றதுக்குள்ள' படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை சத்யம் சினிமாஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் அடிபடுகிறது.