மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
நலந்தானா உள்பட பல படங்களில் நடித்தவர் ஜோதிஷா. கிளாமர், ஹோம்லி என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்துவரும் இவர், தற்போது பேய் இருக்கா இல்லையா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருடன் இன்னும் இரண்டு நடிகைகளும் நடிக்கும் இந்த படத்தில், ஒரு காட்சியில் பேயாக நடித்தபோது அந்த கதாபாத்திரமாகவே மாறி சுற்றி நின்றவர்களை மிரட்டி விட்டாராம் ஜோதிஷா.
இதுபற்றி பேய் இருக்கா இல்லையா படத்தின் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறுகையில், பேயாக நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, பயங்கர ஆவேசமாகி நடித்தார் ஜோதிஷா. தலைவிரி கோலத்துடன், கண்களை உருட்டி, முகத்தில் ஆவேசம் காட்டி அவர் நடித்தது படுபயங்கரமாக இருந்தது. அதோடு, அந்த காட்சி ஓகே ஆகி கட் சொல்லப்பட்ட பிறகும் அவர் அதே ஆவேசத்துடன் நடந்து சென்று கொண்டேயிருந்தார். அவர் அருகே சென்று அவரை உசுப்பிய பிறகுதான் நிஜ உலகத்திற்குள் வந்தார். அந்த அளவுக்கு அந்த பேய் கதாபாத்திரத்தை உள்வாங்கி ரியலாக நடித்தார் ஜோதிஷா. அதோடு, அவருக்குள் இருந்த பேயை ஓட்டச்சென்ற சாமிநாதன், கொட்டாச்சி போன்ற சாமியார்களும் அவரது ஆவேசம் கண்டு ஒருகணம் ஆடிப்போனார்கள். அப்படியொரு மிரட்டல் பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார் ஜோதிஷா என்கிறார் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்.