ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான நிதின் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். நிதின் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன், வெங்கட் மற்றும் ரேஷ்மா உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ள கொரியர் பாய் கல்யாண் படம் விரைவில் வெளிவரவுள்ளது. நடிகை யாமினி குப்தா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் பிரேம் சாய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் லோபர் படத்தில் நிதின் நாயகனாக நடிக்கக் கூடும் என தகவல் வெளிவந்தது. ஆனால் லோபர் படத்தின் கதைக்கு ஏற்ற உடல்வாகு நிதினுக்கு இல்லை எனக் கூறி பூரி ஜெகன்நாத் வருண் தேஜை அப்படத்தின் நாயகனாக்கினார். தற்போது நிதின், இயக்குநர் கிருஷ்ணா சைதன்யா படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. ரௌடி பெல்லொவ் எனும் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் கிருஷ்ணா கூறிய கதை நிதினுக்கு பிடித்துவிட்டதாகவும் விரைவில் இப்படத்தில் நிதின் நடிக்கக் கூடும் எனவும் கூறப்படுகின்றது.