அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
லிங்கா படத்தை வாங்கி நஷ்டமடைந்த தியேட்டர்காரர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்பதால் லிங்கா விநியோகஸ்தரான வேந்தர் முவீஸ் தயாரித்த பாயும் புலி படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் சார்பில் ரெட் போடப்பட்டது. பாயும்புலி படத்தை ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நேற்று அவசரமாக கூடி, செப்டம்பர் 4 முதல் புதிய தமிழ்ப் படங்களை வெளியிடப்போவதில்லை என்று அதிரடியாய் அறிவித்தது.
தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு முடிவை அறிவித்த சில மணி நேரத்தில் பாயும்புலி படத்தின் ஹீரோவான விஷாலே இதைஏற்கவில்லை. பாயும்புலி திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இன்று வெளியாகவிருந்த மற்ற படங்களின் தயாரிப்பாளர்களும், தங்களது படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவித்தனர். அப்படி நடந்தால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பின்னடைவு ஏற்படும் சூழல் உருவானது. எனவே தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று மீண்டும் கூடி விவாதித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த்திரைலகைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒன்றுகூடிப் பேசி இன்று முதல் நடைபெறவிருந்த ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாகவும், அதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி படங்கள் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். பாயும் புலி படத்தை வெளியிடமாட்டோம் என்று பிரச்சனை செய்து வரும் திரையரங்கங்கள் ஒருவேளை படத்தை வெளியிடாவிட்டாலும், தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் பாயும்புலி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாயும்புலி, படத்தை வெளியிட மறுக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி அனைத்து சங்கங்களும் ஒன்றுகூடி ஆலோசனை செய்யும் என்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு தெரிவித்தார்.