ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவியரசர் கண்ணதாசன் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டவர். கடந்த 2004ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன்-விஸ்நாதன் அறக்கட்டளையை தொடங்கினார். கண்ணதாசன் புகழ் பரப்ப தோற்றுவிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் கவியரசு விழாவை நடத்தி வந்தார்.
தற்போது எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்து விட்டதால் அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அறக்கட்டளை நிர்வாகிகளின் கூட்டம் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இதில் புதிய தலைவராக இலக்கியவாதி ப.லெட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எஸ்.விஸ்வநாதன் நிறுவனத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
செயலாளராக ஏவிஎம்.சரவணன், இணை செயலாளர்களாக எம்.ரவிச்சந்திரன், பொருளாளராக எஸ்.பி.முத்துராமன், அறங்காவலர்களாக எம்.ஏ.எம்.ராமசாமி, நல்லி குப்புசாமி, வள்ளி அழகப்பன், எம்.முரளி, எம்.கே.மணி, டி.ராமலிங்கம், எஸ்.கண்ணன் ஆகியோர் தொடர்ந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு கவியரசு விழாவை அக்டோபர் 17ந் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ராஜா முத்தையா அரங்கில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.