கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
மாரியைத் தொடர்ந்து வேல்ராஜின் விஐபி-2 படத்தில் நடித்து முடித்த தனுஷ், பிரபுசாலமன் இயக்கும் படத்தில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். டில்லியில் இருந்து சென்னையை நோக்கி வரும் ஒரு ரயிலுக்குள் நடக்கும் காதல் கதைதான் இந்த படம். இதில் ஒரு நடிகையின் டச்சப் பெண்ணாக கீர்த்தி சுரேசும், தம்பி ராமைய்யா நடத்தும் கேட்டரிங்கில் வேலை செய்யும் டீ பாயாக தனுசும் நடித்து வருகின்றனர்.
ஆனால் கீர்த்தி சுரேசை டச்சப் பெண் என்று தெரியாமல் நடிகை என நினைத்து அவர் மீது காதல் கொள்வாராம் தனுஷ். அதேப்போல் கீர்த்தி சுரேசுக்கும் அவர் மீது காதல் பிறக்குமாம். அப்போதுதான், தான் நடிகை என்ற நினைத்த அந்த பெண் ஒரு நடிகையின் டச்சப் பெண் என்பது தனுசுக்கு தெரிய வருமாம். இதையடுத்து அவர்கள் இணைகிறார்களா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதையாம்.
மேலும், முதல் பாதியை காதல், காமெடி என கலகலப்பாக இயக்கியுள்ள பிரபுசாலமன், இரண்டாம் பாதியாக ஆக்சன் கதையில் இயக்குகிறார். காதல் உருவாகும் காட்சிகளை இதுவரை சென்னையில் செட் அமைத்து படமாக்கி வந்தவர், வடஇந்தியா சென்று படமாக்கப்போகிறாராம். ஆக, படத்தின் பிற்பாதி முழுக்க ரயிலுக்கு வெளியே நடக்கும் காட்சிகள்தான் இடம்பெறுகிறதாம். விரைவில் சென்னையில் படப்பிடிப்பை முடித்து விட்டு வடஇந்தியா பறக்கிறதாம் தனுஷ்-பிரபுசாலமன் டீம்.