ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிம்புவும், சர்ச்சையும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் போலவே இருக்கிறார்கள். இப்போதுதான் 'வாலு' சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்து படமும் வெளிவந்து ரசிகர்களை சோதித்துப் பார்த்தது. இப்போது அடுத்த ஒரு சர்ச்சையை சிம்புவும், அவருடைய அப்பா டி.ஆரும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை. இரண்டு பாடல்கள் எடுக்க வேண்டியுள்ளது, அதற்கு நயன்தாராவின் கால்ஷீட்டை வாங்கித் தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ஆர். புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், நயன்தாராவிற்கு இதுவரை நடித்ததற்கே சம்பளத்தை சரியாக கொடுக்கவில்லையாம். அதனால் அவர் எப்படி நடிக்க வருவார் எனச் சொல்கிறார்கள். அதை மறைத்து விட்டு, நயன்தாரா ஏதோ வேண்டுமென்றே வராதது போல ஒரு பிரச்சனையை டி.ஆர் உருவாக்குவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், படத்தை எடுத்து முடிக்க தயாரிப்பாளரான டி.ஆர். பல நேரம் கை விரித்த நேரத்தில் இயக்குனர் பாண்டிராஜே அவருடைய சொந்தப் பணத்தைப் போட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள். அவருக்கும் கோடிக்குப் பக்கத்தில் பணம் தர வேண்டுமாம்.
ஆனால், டி.ஆர் புகார் கொடுத்ததன், பிரச்சனை அதுவல்ல என்கிறார்கள். படத்தின் பிரமோஷனுக்காக ஒரு பாடலை எடுக்க டி.ஆரும், சிம்புவும் திட்டமிட்டுள்ளார்களாம். அந்தப் பாடலில் சிம்பு, டிஆர், படத்திற்கு இசையமைத்துள்ள டி.ஆரின் இளைய மகன் குறளரசன் ஆகியோர் நயன்தாராவுடன் இணைந்து ஒரு பாடலைப் படம் பிடிக்க திட்டம் போட்டுள்ளார்களாம். அது தெரிந்துதான் நயன்தாரா படத்திற்கு கால்ஷீட் தரவில்லை என்கிறார்கள். படத்திற்குண்டான காட்சிகள் அனைத்தையும் அவர் முடித்துக் கொடுத்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். இவர்களில் யார் சொல்வது உண்மை என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆனாலும், சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு பலமான சர்ச்சையை டி.ஆர் எழுப்பப் போவது உறுதி.