ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அட்டகத்தி நந்திதா எப்படி பெங்களூரில் மாடர்ன் பெண்ணாக வளர்ந்தாரோ, அதேபோல்தான் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேசும் சென்னை சிட்டியில் வளர்ந்த மாடர்ன் பெண். அதோடு இப்போது வரை நந்திதாவுக்கு எப்படி மாடர்ன் கதைகள் கிடைக்கவில்லையோ அதேபோல் ஐஸ்வர்யாவுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே நடித்த பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களில் வில்லேஜ் கெட்டப்பில் நடித்தவர் இப்போது இடம் பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி, ஹலோ நான் பேய் பேசுறேன் ஆகிய படங்களிலும் வில்லேஜ் ரோலில்தான் நடித்திருக்கிறார்.
அதனால், தன் மீது விழுந்துள்ள கிராமத்து முத்திரையை அகற்ற வேண்டும் என்று நந்திதா முயற்சிப்பதை போன்று ஐஸ்வர்யா ராஜேசும் தீவிர முயற்சி எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால், சினிமா வட்டாரங்களில் யாரை சந்திக்க சென்றாலும், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து செல்லும் அவர், உடம்பு முழுக்க கவர் பண்ணி நடிக்கும் கதாநாயகியாக நடிக்க சொல்பவர்களிடம், நான் சிட்டி கல்ச்சரில் வளர்ந்த பெண். அதனால் கிளாமர் கலந்த ஹீரோயினி வேடங்கள் கொடுங்கள் என்று கேட்கிறார். மேலும், எனக்கு ஒன்றும் கிளாமராக நடிக்க ஆசையில்லை. ஆனால் இன்றைக்கு தியேட்டருக்கு வருபவர்களே இளவட்ட ரசிகர்கள்தான். அதனால் அவர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் நான் மாடர்ன் கெட்டப்புக்கு மாறினால்தான் முடியும் என்றும் தனது மனநிலையை சொல்லி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.