விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
குழந்தைகளை தாக்கும் மிக கொடிய நோய், தசை திசைவு நோய். இந்த நோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறியவும் முடியாது. அப்படிப்பட்ட கொடிய நோய். இதில் பாதிக்கப்பட்டுவிட்டால் அந்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலிதான். மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். இந்த நோய் பாதித்த குழந்தைகளை அன்போடும், கரிசனத்தோடும் கவனிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல அமைப்புகள் உலகம் முழுவதும் தோன்றி உள்ளன. சென்னையில் ஜீவன் பவுண்டேசன் என்ற அமைப்பு அதனை செய்து வருகிறது. இந்த அமைப்பு இந்த நோய்பற்றிய விழிப்புணர்வுக்காக மாயோ ராலி என்ற பெயரில் சென்னை மெரீனா பீச்சில் ஒரு பேரணியை நடத்தியது. இதில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நோய் பாதித்த குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகள் கார்த்திக்கிற்கு நன்றி கார்டுகளை வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஜீவன் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர்ள் வசந்தி பாபு, அஜய் ஆகியோர் செய்திருந்தனர்.