ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முண்டாசுப்பட்டியில் கிராமத்து மீசைக்கார தாத்தாவாக நடித்தவர் மதுரை மோகன். சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அவரை இந்த படம்தான் வெளிச்சம் போட்டு காட்டியது. அதிலிருந்து தாத்தா வேடம் என்றாலே கூப்பிடு மதுரை மோகனை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு கோடம்பாக்கத்தில் முக்கியமான தாத்தா நடிகராகியிருக்கிறார் மதுரை மோகன். இந்நிலையில், தற்போது அச்சம் என்பது மடமையடா, அண்டாவக்காணோம், ரஜினிமுருகன், கட்டம் போட்ட சட்டை என பல படங்களில் காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார் அவர். இதில் அண்டாவக்காணோம் படத்தில் தனக்கு மிகப்பெரிய ரோல் தரப்பட்டிருப்பதாக சொல்கிறார் மதுரை மோகன்.
அது எந்தமாதிரியான வேடம் என்று அவர் கூறும்போது, ஒரு கிராமத்தில் ஒன்றாகவே படித்து வளர்ந்த இரண்டு நபர்கள் ஜாதிப்பிரச்சினையினால் பகைவர்களாகிறார்கள். அவர்களால் ஊரும் ரெண்டுபடுகிறது. இறுதியில் அவர்கள் ஒன்றுசேரும்போது ஊரும் இணைந்து விடும். இந்த கதையில் நானும், உசிலம்பட்டியைச்சேர்ந்த ஒருவரும் எதிரும் புதிருமான வேடத்தில் நடித்திருக்கிறோம். இப்படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நக்கல், நய்யாண்டி என்று நடித்திருக்கிறேன். காமெடி, நட்பு, வில்லத்தனம், லொள்ளு, ஜொள்ளு என்று எல்லாவிதமான அம்சங்களையும் இந்த படத்தில் நான் வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் டைரக்டர். அதனால் இந்த அண்டாவக்காணோம் படம் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.