ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏவிஎம், சூப்பர்குட் மாதிரியான பெரிய நிறுவனங்களே படம் தயாரிக்க தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் "குறைந்த பட்ஜெட், நிறைய உழைப்பு, நிறைய லாபம்" என்கிற குறிக்கோளோடு தயாரிப்பாளராக அறிமுகமானவர் சி.வி.குமார். தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் 5 ஆண்டுளில் 13 படங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
2012ம் ஆண்டு அட்டகத்தி படத்துடன் இவரது தயாரிப்பு பயணம் தொடங்கியது. அதே ஆண்டு பீட்சாவும் வெளிவந்தது. இரண்டுமே ஹிட்டானதும் இண்டஸ்ட்ரி திருக்குமரன் நிறுவனத்தை திரும்பி பார்த்தது. அதன் பிறகு 2013ல் தயாரித்த சூதுகவ்வும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. அடுத்து வெளிவந்த வில்லா தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து 2014ல் வெளிவந்த முண்டாசுபட்டி ஹிட்டானது தெகிடி, சரபம் படங்கள் சுமாராக ஓடியது. இந்த ஆண்டு எனக்குள் ஒருவன், இன்று நேற்று நாளை படங்களை வெளியிட்டது, இன்று நேற்று நாளை வெற்றி பெற்றது.