இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
தமிழ்த் திரையுலகில் அடுத்த பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக 'புலி' படம் அமைந்திருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஸ்ரீதேவி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வருவதில் இருந்து, விஜய் ஒரு ஃபேன்டஸி சரித்திரக் கதையில் நடிப்பது வரை பல புதுப்புது விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். செப்டம்பர் மாதம் 17ம் தேதி படம் வெளியாகப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன. அதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
படத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகள் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மறுபக்கம் படத்தின் டப்பிங் பணிகள் உட்பட பல வேலைகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்துள்ள ஸ்ரீதேவியும் படத்தில் சொந்தக் குரலில் பேசுகிறார். இதற்காக சென்னைக்கு வந்த அவர் கடந்த வாரம் டப்பிங் பேசிக் கொடுத்துள்ளார். இப்போது ஸ்ருதிஹாசன் அவரது டப்பிங் பணியை ஆரம்பித்துள்ளார். விஜய் ஏற்கெனவே டப்பிங் பேசி முடித்துவிட்டதாகத் தெரிகிறது. தற்போது தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறதாம். வேறு பெரிய படங்கள் இல்லாததால் எதிர்பார்த்ததை விட படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்கிறார்கள்.
விரைவில் படத்தின் புதிய டிரைலரையும் வெளியிட உள்ளார்கள்.