சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சில நாட்களுக்கு முன்பு, 'பிரேமம்' படத்தை பற்றியும், அது கிளப்பிவிட்ட வீடியோ பைரஸி பிரச்சனை பற்றியும் தனக்கு தோன்றிய கருத்துக்களை சொல்லி சர்ச்சையை கிளப்பியிருந்தார் பிரபல மலையாள இயக்குனரான கமல். தற்போது மம்முட்டியை வைத்து 'உடோபியாயிலே ராஜாவு' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்தப்படத்தின் ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருக்கும் கமல் மீண்டும் பிரேமம் பற்றி இன்னொரு விளக்கத்தையும் கூறியுள்ளார்..
அதாவது 'பிரேமம்' படத்தை பற்றி தான் கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன என்றும், வீடியோ பைரஸி என்பது பலகாலமாக இருந்துவரும் சூழலில் இந்த ஒரு படத்தை மட்டும் மீடியாவும், போலீசாரும் உயர்த்தி பிடிப்பது ஏன் என்றுதான், தான் கேட்டதாகவும் கோபப்படுகிறார் கமல். அதுமட்டுமல்ல, ஒரு மாணவன், ஆசிரியையை காதலிப்பதாக தவறான பாதையை காட்டும் படத்தை கண்டித்து கருத்துச்சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்றும் கொந்தளிக்கிறார்.