ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தான் ஹீரோவாக நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில்தான் முதன்முதலாக பின்னணி பாடினார் தனுஷ். அப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில், நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு -என்று அவர் பாடிய பாடல் ஹிட்டடித்தது. அதையடுத்து, தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, சீடன் ஆகிய படங்களில் பாடிய தனுஷ், 3 படத்தில் அனிருத் இசையில் பாடிய, ஒய் திஸ் கொலவெறி -பாடல் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலப் படுத்தியது.
அதனால் சமீபகாலமாக தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே பின்னணி பாடி வருகிறார் தனுஷ். சில படங்களில் பாடல்கள் எழுதியும் பாடி வருகிறார். அந்த வகையில், மாரி படம் வரை பின்னணி பாடியிருக்கும் தனுஷ், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் படங்களில் மட்டுமே மற்ற ஹீரோக்களுக்காக பாடியிருக்கிறார்.