ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சுப்பிரமணியபுரம், நாடோடி, ரம்மி படங்களில் நடித்தவர் இனிகோ பிரபாகரன். ஹீரோவாக ஜெயிக்க போராடும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் மிகவும் எதிர்பார்த்த ரம்மி படம்கூட இவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது அவர் வீரைய்யன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் இயக்குனர் எஸ்.பரித் இயக்குகிறார். தென்னவன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்செண்ட், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பி.வி.முருகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோலிசோடா அருணகிரி இசை அமைக்கிறார்.
"மன்னர்கள் வாழ்ந்த பூமியான தஞ்சையில் இப்போது மக்கள எப்படி வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்ட மக்கள் இப்போது வெளிநாடுகளில் கூலி வேலை செய்யும் நிலை ஏன் வந்தது. தஞ்சையின் பழம்பெருமை என்ன ஆனது என்பதை பற்றிச் சொல்லப்போகும் படம். முழு படமும் தஞ்சையை சுற்றி படமாகிறது" என்கிறார் இயக்குனர் பரித். படத்தின் பூஜை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலில் நடந்தது.