ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முன்பெல்லாம் கதாநாயகிகள் விசயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டார் ஜீவா. மார்க்கெட் இல்லாத நடிகையோ, புதுவரவு நடிகையோ யாராக இருந்தாலும் ஓகே என்று கூறி விடுவார். ஆனால், சமீபகாலமாக தனது மார்க்கெட் மந்தமாக இருந்து வருவதால், மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகளுடன் கூட்டணி அமைத்தால் வெற்றிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்.
அதனால்தான், திருநாள் படத்தில் நடிப்பதற்கு ஒரு இளவட்ட நடிகையிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தங்களது சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் கொடுக்கப் பட்டிருந்த நயன்தாராவை மீண்டும் அணுகினார். ஏற்கனவே பேசி வைத்திருந்த ப்ராஜக்ட் கிடப்பில் போடப்பட்டதால், அந்த கால்சீட்டைத்தான் இப்போது பயன்படுத்துகிறோம் என்று சொல்லி கமிட் பண்ணினார். வேறுவழியில்லாமல் நயன்தாராவும் அதற்கு கட்டுப்பட்டார்.