ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மொட்டை போட்டு நடித்தால் அந்தப் படம் வெற்றிபெறும், அந்த நடிகருக்கும் பெயர் கிடைக்கும் என்கிற நம்பிக்கை திரையுலகில் இருக்கிறது. சூரியனில் சரத்குமார் மொட்டை போட்டார். சேதுவில் விக்ரம் மொட்டை போட்டார். ஆளவந்தானில் கமல் மொட்டை போட்டார். சிவாஜியில் ரஜினி மொட்டை போட்டார். யுத்தம் செய் படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் மொட்டை போட்டார்.
இப்படியே சொல்லத் தொடங்கினால் பட்டியல் நீளும். இப்போது இந்த வரிசையில் நடிகர் கிஷோரும் இணைந்து இருக்கிறார். அவர் நடிக்கும் யாத்ரீகன் படத்துக்காக மொட்டை போட்டுள்ளார். ஆனால் அதன் பின்னணி வேறு விதமானது.
கதைப்படி கிஷோர் நடிக்கும் பாத்திரம் இந்தியாவெங்கும் சுற்றித் திரிகிறது. நேபாளத்தில் ஒரு புத்த பிட்சுவைச் சந்திப்பது போல காட்சி எடுக்க வேண்டி இருந்தது. அவரைச் சந்திக்க வேண்டுமென்றால் மொட்டை போட்டு அவர்கள் சார்ந்த உடைகளை அணிந்து வர வேண்டும் என்றதால் அதற்காக சற்றும் தயங்காமல் மொட்டை போட்டாராம். கிஷோர்.