ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கியுள்ள படம் ''விசாரணை''. அவரின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, தனுஷின் வொண்டர் ஃபார் பிலிம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் நடித்துள்ளனர். இதனை சந்திரகுமார் எழுதிய லாக்-அப் என்ற நாவலை தழுவி எடுத்துள்ளார் வெற்றிமாறன். குற்றமற்ற ஒருவன் போலீசார் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்று கொடூரமான விசாரணை நடத்துகிற கதை. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார், ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மணிநேரமே ஓடும் சிறப்பு திரைப்படம் இது.
காக்கா முட்டை பாணியிலான யதார்த்த சினிமா இது. சமீபத்தில் முதல் காப்பி தயாரானது.
தற்போது தனது விருது பயணத்தை தொடங்கி உள்ளது. வெனிஸ் நகரில் நடைபெறும் 72வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட விசாரணை தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறது. இந்த படவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்படுவதே கடினம். அதுவும் விசாரணை போட்டிபிரிவில் தேர்வாகி உள்ளது. அப்படி தேர்வான முதல் தமிழ் படம் இதுதான். செப்படம்பரில் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.