ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'பாகுபலி' படம் நேரடி மொழிப் படமாக வெளிவந்த தெலுங்கு, தமிழில் எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் 100 கோடியைக் கடந்தும் தமிழில் 50 கோடியைக் கடந்தும் வசூல் சென்று கொண்டிருக்கிறது. ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான இந்தப் படத்திற்கு சாதாரண வரவேற்புதான் இருக்கும் என்று வெளியீட்டிற்கு முன்னர் பாலிவுட்டினர் பேசிக் கொண்டார்கள். ஆனால், படம் பற்றி வாய்மொழித் தகவலால் பாலிவுட்டிலும் படம் 100 கோடி ரூபாயைத் தாண்டி நேரடி ஹிந்திப் படம் அளவிற்கு வசூலை அள்ளித் தந்துள்ளது. இது அங்குள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. உலக அளவில் 400 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் போய்க் கொண்டிருக்கிறது, விரைவில் 500 கோடி ரூபாயைக் கடந்துவிடும்.
இதனிடையே, 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அடுத்தக் கட்ட படப்பிடிப்பு வேலைகளை இயக்குனர் ராஜமௌலி ஆரம்பித்துவிட்டாராம். இதுவரை சுமார் 40 சதவீத அளவிற்கு இரண்டாம் பாக வேலைகள் முடிவடைந்துள்ளதாக அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இப்போது படத்திற்கு ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இரண்டாம் பாகத்தில் சில முக்கிய கதாபாத்திரங்களில் சில முன்னணி ஹிந்தி நடிகர்களை நடிக்க வைக்கலாமா என அவர் யோசித்து வருவதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தி நட்சத்திரங்கள் நடிக்கும்பட்சத்தில் படத்தை டப்பிங் செய்து வெளியிட்டால் கூட அவர்களுக்குத் தெரிந்த முகங்களாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என அவர் நினைக்கிறாராம். இது பற்றி அதிகாரப்பூர்வத் தகவல் வரவில்லை என்றாலும், அப்படி ஒன்று நடந்தால் அது 'பாகுபலி' இரண்டாம் பாகத்தின் இந்திய அளவிலான வசூலுக்கு பேருதவியாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.