ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமாவில் மட்டும் தான் நடிப்போம் என்று சொல்கிற பேச்சுக்கே மலையாள நட்சத்திரங்களிடம் வேலையில்லை. முகேஷ் தனது மனைவியுடன் இணைந்து இரண்டு மணி நேரம் மேடை நாடகம் நடத்தவிருக்கிறார். அதற்கு சூப்பர்ஸ்டார் மோகன்லால் கதைசொல்லியாக பின்னணி குரல் கொடுக்கிறார். லேட்டஸ்ட் தகவலாக, மறைந்த பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான பத்மராஜன் எழுதிய நாடகத்தில் சுரேஷ்கோபியும் ஜெயராமும் பங்கேற்கிறார்கள். ஆனால் இது மேடை நாடகம் அல்ல.. ரேடியோவில் ஒலிபரப்பாகும் நாடகம்.
பத்மராஜன் 1968ல் எழுதிய 'அகலே அகலே ஆஸ்வாசம்' என்கிற கதையைத்தான் நாடகமாக்கி இருக்கிறார்கள். இதில் கதாநாயகன் பாத்திரமாக ஜெயராமும், அவரது தந்தையாக நெடுமுடி வேணுவும், டாக்டராக சுரேஷ்கோபியும் அவரது மனைவியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்யலட்சுமியும் குரல் கொடுத்து நடிக்க இருக்கிறார்கள்.
பத்மராஜன் இயக்கிய 'அபரன்' படத்தில் தான் ஜெயராம் அறிமுகமானார். அவர் இயக்கிய 'இன்னலே' படத்தில் தான் சுரேஷ்கோபியும், ஜெயராமும் முதன்முதலாக இணைந்து நடித்தார்கள். அதனால் தான் ரேடியோ நாடகம் என்றாலும் பத்மராஜன் கதை என்பதால் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். வரும் ஆகஸ்ட்-2ஆம் தேதி ஆல் இந்திய ரேடியோவில் இந்த நாடகம் ஒலிபரப்பாகிறது.