ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா மட்டுமே. மற்ற நடிகைகளை விட அதிகமான படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, தன்னை வளர்த்துவிட்ட தெலுங்குப் படங்களை இப்போதைக்கு சுத்தமாக மறந்தே விட்டார். சென்னைப் பெண்ணாக இருந்து கொண்டு தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றால் எப்படி, அதனால்தான் தற்போது கிடைத்து வரும் வாய்ப்புகளை சமந்தா மிஸ் பண்ணாமல் கைப்பற்றி விடுகிறார்.
'பத்து எண்ணுறதுக்குள்ளே, விஐபி 2, 24, பிரம்மோற்சவம், விஜய் 59, வட சென்னை' ஆகிய படங்களின் நாயகியாக அத்தனை முன்னணி தமிழ் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார் சமந்தா. இன்னும் பல புதுப்பட வாய்ப்புகள் சமந்தாவைத் தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அதற்கெல்லாம் எப்படி தேதிகளை ஒதுக்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். மேலும், தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.
விஜய்யுடன் அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஜோடியாக நடித்து வரும் படம் பற்றி நேற்று டிவீட் ஒன்று செய்துள்ளார். “விஜய்யுடன் நடிக்கும் புதிய படத்தின் ஷெட்யூல் ஒன்றை முடித்துவிட்டேன். என்னுடைய படங்கள் வெளிவரும் நாட்களைக எண்ணிக் கொண்டு, பொறுமையிழந்து உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் அடுத்த வெளியீடாக 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படம்தான் வர வேண்டும். ஆனால், படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் 'விஐபி 2' வெளிவந்து விடும் வாய்ப்புதான் அதிகம் என்கிறார்கள்.