ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
கவிதாலயா தயாரிப்பில் கிருஷ்ண லீலை படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருந்தார் திருட்டுப்பயலே ஜீவன். ஆனால் அந்த படம் சில பல காரணங்களால் இப்போதுவரை திரைக்கு வரவில்லை. அதனால் அதன்பிறகு ஜீவனை யாரும் புதிய படங்களுக்கு புக் பண்ணாததால் பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தான் தனது ஜெயிக்கிற குதிரை படத்துக்காக அவரை மீண்டும் அழைத்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அப்படத்துக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதையடுத்து அதிபர் என்ற படத்தில் இயக்குனர் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்து வந்தார் ஜீவன். அந்த படம் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில், பைனான்ஸ் பிரச்னையில் நிறுத்தப்பட்ட ஜெயிக்கிற குதிரை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. அதனால் ரீ-என்ட்ரியில் நடித்த முதல் படமே கிடப்பில் கிடக்கிறதே என்று மனதளவில் பீல் பண்ணிக்கொண்டிருந்த ஜீவன் மறுபடியும் உற்சாகமாக ஜெயிக்கிற குதிரையில் ஏறியிருக்கிறார்.