ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நாமக்கல்: பதவிக்கு வந்தால் தான், நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு நல்லது செய்ய முடியும், என, நாமக்கல்லில், நடிகர் விஷால் பேசினார்.
நாமக்கல்லில் நாடக நடிகர் சங்கத்தினர் சார்பில், கலை குடும்ப சந்திப்பு விழா நடந்தது. இதில், நடிகர் நாசர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம், ஏன் இடிந்துள்ளது என, 2013ல் இருந்து, தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக கேட்டு வருகிறோம்; பதில் இல்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அங்குள்ள குப்பைகளை அகற்றுவோம், என்றார்.
நடிகர் விஷால் பேசியதாவது:சக நடிகர்களான உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் சம்பளம். நாடக நடிகர்கள் இல்லை என்றால், நடிகர் சங்கம் இல்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ஊழல், முறைகேடு பெரிய அளவில் நடந்துள்ளது. நாங்கள், இங்கு ஓட்டு கேட்க வரவில்லை. சக நடிகர்களிடம் பேசி, கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வந்துள்ளோம். இதற்கு, தடை விதிக்க முடியாது. நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். பதவிக்கு வந்தால் தான், நடிகர்களுக்கும், நாடக கலைஞர்களுக்கும் நல்லது செய்ய முடியும்.
இவ்வாறு, விஷால் பேசினார்.