ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி ஷாம்லி. குமரியான பிறகு சில தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றவர், சில மாதங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.
அதையடுத்து வந்தவேகத்திலேயே அவர் ஒரு போட்டோசெஷன் எடுத்துக்கொண்டார். ஆனால் அது நடிப்பதற்காக எடுக்கப்பட்டதில்லையாம். தனது அக்கா கணவரான அஜீத் போட்டோ எடுப்பதில் வல்லவர் என்பதை ஆராய்வதற்காக எடுத்துக்கொண்டதாம்.
ஆனால் அதை வைத்தே ஷாம்லி மீண்டும் நடிக்க வந்து விட்டார் என்று செய்திகள் வெளியாகி விட்டது. இருப்பினும், ஏற்கனவே நடித்தவர் என்பதால் அடுத்த ரவுண்டை ஆரம்பித்தாலென்ன என்று சிலர் வலியுறுத்தியதின் காரணமாக தற்போது ஷாம்லிக்கு அழைப்பு விடுத்த சில கம்பெனிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். ஆனபோதும் இன்னமும் எந்த படத்தில் நடிப்பது என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லையாம்.