ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அனைவருமே சென்னையிலுள்ள சாலிகிராமம் ஏரியாவில்தான் பங்களா கட்டி வந்தனர். ஆனால் இப்போது அனைவரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையான ஈசிஆரில் பங்களா கட்டி குடியேறி விட்டனர். அதனால் சினிமா நகரமாக இருந்து வந்த கோடம்பாக்கம், சாலிகிராமம் போன்ற ஏரியாக்களில் இப்போது பிரபல நடிகர்களின் வீடுகள் இருந்தாலும் அதில் அவர்கள் குடியிருக்கவில்லை. வேறு நபர்கள்தான் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.
மேலும், புதிதாக வீடு கட்டும் நடிகர்கள் இப்போது ஈசிஆரில்தான் கட்டுகின்றனர். அந்த வகையில், தற்போது முன்னணி காமெடி நடிகராகிக்கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரனும் ஈசிஆரில் ஒரு பங்களா கட்டி வருகிறார். அதற்கான வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. அதனால் இன்னும் ஓரிரு மாதத்தில் அவரும் அந்த பங்களாவில் குடியேறி, ஈசிஆர் நட்சத்திர பட்டாளத்தில் தானும் ஒருவராகி விடுவார் என்று தெரிகிறது.