ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கி வரும் சிம்புதேவன் படு உஷார் பார்ட்டி.
அடிப்படையில் பத்திரிகையாளரான சிம்புதேவன் பிரபல பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாகவும் பணியாற்றினார்.
அதன் பிறகு சேரனிடம் உதவியாளராக வேலை பார்த்துவிட்டு, பிறகு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குநரானார்.
இயக்குநரானாலும் பத்திரிகையாளர்கள் பலருடனும் தொடர்பில்தான் இருந்து வந்தார்.
தன்னுடைய அடுத்தப்படம் என்ன? எப்போது படப்பிடிப்பு? என்ன லேட்டஸ்ட் தகவல் என பலவற்றையும் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுக்கு போன் போட்டு சொல்வார்.
குறிப்பாக படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன் தன் நட்பு வட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சொல்லிவிட்டுத்தான் கிளம்புவார்.
புலி படம் கமிட்டான பிறகு சிம்புதேவனிடம் மிகப்பெரிய மாற்றம்.
பத்திரிகையாளர்களுடன் நெருக்கமாக இருந்தால் புலி படத்தைப் பற்றி ஏதாவது கேட்பார்கள்.. ஏன் வம்பு என்று நினைத்தாரோ என்னவோ பத்திரிகையாளர்களின் தொடர்பை அப்படியே துண்டித்துக்கொண்டார்..
இது பற்றி குறிப்பிட்ட சீனியர் பத்திரிகையாளர் ஒருவர், சிம்புதேவனின் எல்லாப்படத்திலும் விஜய்யே ஹீரோவாக நடிக்க முடியாது. அப்போது மீண்டும் பத்திரிகையாளர்களை தேடி வருவார் என்று கமெண்ட் அடித்தார்.
அவ்வளவு நாள் எதற்கு புலி படத்தின் பத்திரிகையாளர் காட்சியின்போதே தேடி வருவார் என்று கமெண்ட் அடித்தார் இன்னொரு சீனியர் ரிப்போர்ட்டர்.