சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
'இன்று நேற்று நாளை' படம் வெற்றி பெற்றுவிட்டது என படத் தயாரிப்பு நிறுவனமே இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது. அதோடு, விரைவில் இரண்டாம் பாகத்தையும் பிரபல முன்னணி நடிகர் நடிக்க எடுக்க உள்ளோம் என்றும் அறிவித்தார்கள். அப்படியென்றால் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷாலே இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் முதல் பாகத்தில் நடித்த நாயகனேதான் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார். ஆனால், 'இன்று நேற்று நாளை' படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யாவை இரண்டாம் பாகத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.
இது சம்பந்தமாக விஷ்ணு விஷாலும் எந்த விதமான வருத்தத்தையும் காட்டிக் கொள்ளவில்லை என்கிறார்கள். விஷ்ணு விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள், அவரேதான் ஆர்யாவை, படத் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்றும் சொல்கிறார்கள். மேலும் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த 'ஜீவா' படத்தைக் கூட ஆர்யாவும், விஷாலும் வாங்கி வெளியிட்டுள்ளார்கள். அதோடு சி.வி.குமார் தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வழங்கி வருகிறார். அதனால், 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாக விவகாரத்தில் எந்தப் பிரச்சனையும் எழ வாய்பேயில்லை என விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.