ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில 'ரேணிகுண்டா' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். தொடர்ந்து 'கோ, ரகளபுரம், அஞ்சான், மீகாமன்' உட்பட சில படங்களில் கதாபாத்திரங்களிலும், சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். தற்போது 'தோடா லுத்ஃப் தோடா இஷ்க்' என்ற ஹிந்திப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தான் ஹிந்தி வரை சென்று விட்டதை தமிழ்த் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் நேற்று அந்தப் படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய சஞ்சனா சிங், என்னைப் பொதுவாக 'ஐட்டம் கேர்ள்' என்று குறிப்பிட்டுச் சொல்லாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். “சினிமாவில் நான் 'ரேணிகுண்டா' படம் மூலம் இரண்டாவது கதாநாயகியாகத்தான் அறிமுகமானேன். அதன் பின் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளேன். சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். தற்போது ஹிந்தியில் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்குத்தான் நடனமாடியுள்ளேன். ஆனால், அங்கெல்லாம் ஒரு நடிகையை ஹீரோயின் என்றோ, நகைச்சுவை நடிகை என்றோ, ஐட்டம் கேர்ள் என்றோ தனித் தனியாக பிரித்துச் சொல்வதில்லை.
எந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவர்களை நடிகையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இங்குதான் தனித் தனியாக அழைக்கிறார்கள். எனவே தயவு செய்து இனிமேல் என்னை 'ஐட்டம் கேர்ள்' என்று அழைக்காதீர்கள்,” எனக் கேட்டுக் கொண்டார்.
'தோடா லுத்ஃப் தோடா இஷ்க்' படத்தில் சஞ்சனா நடனமாடியுள்ள பாடல் ஹிந்தியில் வெளியீட்டிற்கு முன்னரே மிகவும் பாப்புலர் ஆகிவிட்டதாம். பல தொலைக்காட்சிகளில் பாடல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் என்று பேசும் போது சஞ்சனா குறிப்பிட்டார். இந்தப் படம் ஜுலை 10ம் தேதி வெளியாகிறது.