ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
''காதலில் சொதப்புவது'' எப்படி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன்,அடுத்தப்படியாக துல்கர் சல்மானை வைத்து வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான முயற்சியாக இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக தனுஷை வைத்து மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே மாரி படத்தினை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அன்றைய தினம் இரண்டு ஆண்டுகளாக ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்த சிம்புவின் வாலு படமும், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஜூலை 17ம் தேதி மும்முனை போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் ஜூலை 17ம் தேதி ரேஸிலிருந்து மாரி விலகிவிட்டதாக தற்போது தவகல் வெளியாகியுள்ளது. ''மாரி'' படத்தில் சில காட்சிகள் ரீ-ஷூட் எடுக்க வேண்டியிருப்பதால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனும், சிம்புவும் மோத உள்ளனர்.