ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனுஷுடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி' என இப்போதைக்கு இரண்டு தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் பேசிக் கொண்டு வருகிறாராம். சமீபத்தில் 'மாரி' படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது வழக்கம் போலவே காதலைப் பற்றியும், அவருக்கு வரப்போகும் கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். காஜல் தமிழில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிகவும் அபூர்வம் என்பதால்தான் இந்த அரதப் பழசான கேள்வி. இருந்தாலும் காஜலின் பதில் புத்தம் புதிதாகவே இருந்தது.
'பார்த்தவுடன் காதல் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். நிஜ வாழ்வில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. நானும் காதலிப்பதாக சில செய்திகள் வந்துள்ளன. அது எனக்கும் தெரியாத செய்திதான். எனக்கும் காதலர் இருந்தால் நல்லதுதான். ஆனால், எனக்கு காதலிக்க நேரமில்லை. அதே சமயம், இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை. எனக்குள் காதல் வந்தால் அதை இந்த உலகத்திற்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்துவேன். என்னை திருமணம் செய்து கொள்பவர், நேர்மையானவராகவும், நம்பிக்கையானவராகவும், புரிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.