ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த வாரம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் இருதய அறுவவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அதன் விளைவாக அடிக்கடி அவருக்கு மூச்சு திணறல் ஏற்படுவதுண்டு. திடீரென்று அது அதிகமாகவே அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துமணை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இசை அமைப்பாளர் இளையராஜா அவரை அடிக்கடி சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். நேற்றும் இளையராஜா எம்.எஸ்.வியை சந்தித்தார். அவர் ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அவர் திட உணவு உண்ணலாம் என்றாலும் அதனை எம்.எஸ்.வி மறுத்து வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட இளையராஜா அவரை சமாதானப்படுத்தி தன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வரச்செய்து ஊட்டி விட்டார். இதனால் எம்.எஸ்.வி சிறிது உணவு உட்கொண்டார். இன்று அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதராண வார்டுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அவரது மகன் எம்.எஸ்.வி.கோபி அருகில் இருந்த கவனித்து வருகிறார்.