ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தடையறத் தாக்க, என்னமோ ஏதோ போன்ற தமிழ் படங்களில் நடித்து வரவேற்பு பெறாத ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது டோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இதனால் தனது சம்பளத்தையும் ராகுல் ப்ரீத்தி சிங் தனது வளர்ச்சிக்கு ஏற்ப உயர்த்தியுள்ளார். இதுவரை ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கி வந்த ராகுல் ப்ரீத்தி சிங் இனி மேல் ஒரு கோடி சம்பளம் வாங்க முடிவு செய்துள்ளார். டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜாவுடன் கிக் 2 படத்தில் நடித்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங், ஜூனியர் என்.டி.ஆருடன் புரூஸ் லீ படத்திலும் ராம் சரணுடன் ஒரு படத்திலும் நாயகியாக நடித்து வருகின்றார். மேலும் மகேஷ்பாபுவுடன் பிரமோற்சவம் படத்தில் நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தமாகியுள்ளார். டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங்கை நாயகியாக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். முன்னணி நடிகர்களின் படவாய்ப்பை பெற்றதால் ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது கோடிகளில் சம்பளம் கேட்க துவங்கியுள்ளார்.