ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மிகச்சரியாய் திட்டமிட்டு.. நினைத்த மாதிரியே.. சத்தமில்லாமல் சாதித்துவிட்டார் சிம்பு. அவர் நடித்து சுமார் 3 வருடங்களாக வெளிவராமலே இருக்கும் வாலு படம் ஜூலை 17 அன்று வெளிவருவதாக சொல்லப்படுகிறது. வாலு எப்போது ரிலீஸ் ஆகும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்பதே உண்மை நிலை. இந்தநிலையில் யாரும் எதிர்பாரதவிதமாக ஒரு சர்ப்ரைஸ் நடந்தது.
செல்வராகவனின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் அவசரஅவசரமாக அதிரடியாக வெளியிடப்பட்டது. நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சம், பச்சை சட்டை என கான் போஸ்டரில் வித்தியாசமான கெட்அப்புடன் காணப்பட்டார் சிம்பு. கான் பட போஸ்டரை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ரசிகர்கள் மட்டுமின்றி இணையதள பத்திரிகைககள், பிரபலங்கள் என பலரும் பகிர்ந்தனர். இதனால் கான் போஸ்டர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய அளவில் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து உலகளவிலான டிரென்ட்டில் 5வது இடத்தையும் பிடித்தது. இது பலருக்கும் ஆச்சர்யத்தையும் சந்தேகத்தையும் ஒருசேர எழுப்பியது. கூடவே, சமூகவலைத்தளங்களில் சிம்புவுக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியையும்தான்.
காரணம்... சிம்பு சம்மந்தப்பட்ட படத்தை உலகளவில் டிரெண்டிங்கில் கொண்டு வரும் அளவுக்கு சமூகவலைத்தளங்களில் அவருக்கு பெரியளவில் ரசிகர்கள் படை இல்லவே இல்லை.
பிறகு எப்படி இத சாத்தியமாயிற்று?
சிம்பு தன்னை எப்போதும் தல ரசிகராக காட்டிக் கொள்வதால், அஜித்தின் ரசிகர்கள் சிம்புவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அஜித் ரசிகர்கள் தான் சிம்புவுக்காக இந்த டேக்கை உருவாக்கி உலகளவில் டிரென்ட்டாக்கினர். எது எப்படியோ அஜித், விஜய்யைத் தொடர்ந்து சிம்புவையும் உலகளவில் உச்சரிக்க வைத்துவிட்டனர் அஜித் ரசிகர்கள்.