ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் திரு ஆப்பனூர் மாசா. முத்துவிஜயன் என்பவர் தயாரித்து, இயக்குகிறார். எம்.ஆர்.கே.மூவர் இசை அமைக்கிறார். ராஜ்குமார், ரூபேஷ், சவுமியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
"எங்கள் ஊரான ஆப்பனூரில் புகழ்பெற்ற சிவஸ்தலம் உள்ளது. இங்கு நடக்கும் மாசா திருவிழா புகழ்பெற்றது. அந்த திருவிழா காலத்தில் நடக்கும் கதை. உள்ளூரைச் சேர்ந்த ஹீரோ, ஹீரோயின் காதலிக்கிறார்கள். ஹீரோயின் தந்தை காதலை எதிர்த்தால் மகள் தற்கொலை செய்து கொள்வாள், ஆதரித்தால் ஊர் விலக்கி வைத்து விடுவார்கள் இந்த சிக்கலில் இருந்த தப்பிக்க அந்த தந்தை என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. காதல் வெற்றி பெற காதலர்கள் இருவரும் தமிழ் நாட்டில் உள்ள 14 புகழ்பெற்ற சிவஸ்தலங்களை சுற்றி வருவார்கள். அதனால் 14 சிவன் கோவில்களுக்கும் சென்று படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். சிவனை புகழ்ந்து வரும் ஒரு பாடலில் 14 கோவில் காட்சிகளும் இடம்பெறுகிறது" என்கிறார் இயக்குனர் முத்து விஜயன்.