ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த சில வருடங்களாக வருடத்துக்கு சுமார் 250 படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எத்தனை படங்கள் வெற்றியடைந்தன என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பட எண்ணிக்கை அதிகரித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. வாரத்துக்கு இரண்டு மூன்று நான்கு என ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் புதிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. தொடர்ந்து படம் எடுக்கும் முன்னணி தயாரிப்பாளர்களுக்கும் அவர்கள் எதிர்பாரக்கிற தியேட்டர்கள் கிடைப்பதில்லை.
அதிக வசூலைத் தரும் தியேட்டரைக் கேட்டால், வசூல் வராத சின்ன தியேட்டர்களை ஒதுக்குகிறார்கள் என்று மல்ட்டிப்ளக்ஸ் மீது குற்றம்சாட்டுகின்றனர் தயாரிப்பாளர்கள். கொம்பன் படத்தை வெளியிட்டபோது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் நிர்வாகத்துக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் பிரச்சனையே ஏற்பட்டது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தியேட்டர்களை லீசுக்கு எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஞானவேல்ராஜா.
அதன்பிறகு, வாரத்துக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்வது என்றும் மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறாராம். தான் தயாரிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் தரமான படங்களையும் தன்னுடைய பேனரில் வெளியிட உள்ளார். ஞானவேல்ராஜாவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும் என்று கருத்து தெரிவிக்கின்றனர் திரைப்பட விநியோகஸ்தர்கள்.