மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' |
சந்தானத்தை நடிக்க வைத்த ஒரே காரணத்துக்காக சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்தார் வடிவேலு. அவரை சமாதானப்படுத்த குஷ்பூ கூட முயற்சி செய்தார். அப்படியும் சுந்தர்.சி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன் வீம்பு பிடித்தார் வடிவேலு. எந்த சுந்தர்.சி தனக்காக வடிவேலுவை பகைத்துக் கொண்டாரோ, அதே சுந்தர்.சியின் படத்தில் தற்போது நடிக்க மறுத்திருக்கிறார் சந்தானம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் சுந்தர்.சி படங்களில் ஆரம்பத்தில் கவுண்டமணி, அதன்பிறகு வடிவேலு முக்கிய பங்காற்றினர். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி எடுத்த படங்களில் சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சுந்தர்.சி. இயக்கும் படங்களில் ஹீரோக்களுக்கு சமமான வேடம் முன்னணி காமெடியன்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே, காமெடியன்கள் சுந்தர்.சியின் படங்களில் நடிப்பதற்கு போட்டி போடுவார்கள்.
சந்தானம் ஹீரோவாக மாறிய பிறகும் கூட சுந்தர்.சி படம் என்பதால் 'அரண்மனை', 'ஆம்பள' போன்ற படங்களில் நடித்துக் கொடுத்தார். இப்போது சுந்தர்சி இயக்க உள்ள அரண்மனை - 2 படத்தில் சந்தானம் நடிக்க மறுத்ததால், 'அரண்மனை' 2ஆம் பாகத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சூரி.