ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முரளி நடித்த பூமணி படத்தை இயக்கியவர் மு.களஞ்சியம். அதையடுத்து கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் பின்னர் ஒரு பத்து ஆண்டுகளாக காணாமல் போனவர் மீண்டும் கருங்காலி என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார்.
அப்படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்தும் அதே அஞ்சலியை நாயகியாக வைத்து, ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை தொடங்கினார் களஞ்சியம். அப்படத்தில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டு 12 நாட்கள் நடித்த நிலையில், அஞ்சலிக்கும் அவரது சித்திக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு, சென்னையை காலி பண்ணிவிட்டு ஆந்திராவுக்கு சென்றார் அஞ்சலி.
அதோடு, தங்கள் குடும்ப பிரச்சினைக்கு களஞ்சியமும் காரணம் என்று சொல்லிக்கொண்டு அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றும் கூறினார் அஞ்சலி. அதையடுத்து சினிமா சங்கங்களுக்கு கடிதம் கொடுத்து அஞ்சலியை தனது படத்தில் நடிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டார் களஞ்சியம். ஆனால் அஞ்சலியோ, எனக்கு அவர் முறையான அக்ரிமெண்டோ, சம்பளமோ பேசவில்லை என்று சொல்லி அப்படத்தில் இருந்து கழண்டு கொண்டார்.