ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாணா காத்தாடி அதர்வாவுக்கு பாலாவின் பரதேசி பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனால் அடுத்தபடியாக அவரும் முக்கிய நடிகர்களின் பட்டியலில் சேர்ந்து விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அதோடு இதன்பிறகு தானும் தவிர்க்க முடியாத நடிகராகி விட வேண்டும் என்கிறரீதியில் நூற்றுக்கணக்கான கதைகளை கேட்டுதான் இரும்புக்குதிரை, ஈட்டி படங்களில் நடித்தார் அதர்வா. ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இரும்புக்குதிரை பெரிய ஏமாற்றத்தை அதர்வாவுக்கு கொடுத்து விட்டது. அப்படி அந்த படம் வியாபாரரீதியாக தோல்வியை கொடுத்ததால் அதன்பிறகு அதர்வா நடிப்பில் தயாராகிக்கொண்டிருந்த ஈட்டி, கணிதன் போன்ற படங்களின் விறுவிறுப்பு குறைந்தது. ஆனபோதும், பாலா தயாரிப்பில் களவாணி சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த சண்டிவீரன் படம் வேகமாக வளர்ந்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்தபடத்தை பெரிய அளவில் விற்பனை செய்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையும் இருந்து வருகிறது. மேலும், சண்டிவீரனுக்கு முன்பே படமாக்கப்பட்டு ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் கணிதன், ஈட்டி படங்களும் இப்போது வியாபாரம் பேசப்பட்டு வருகின்றன. ஆக, இந்த மூன்று படங்களில் முதல் படம் வெற்றி பெற்றால் மற்ற படங்கள் தப்பித்து விடும். அதனால் அந்த முதலில் ரிலீசாகப் போகும் படத்தை அதர்வா மட்டுமின்றி அவரை வைத்து தற்போது படமெடுத்துள்ள மற்றும் அடுத்தபடியாக படம் எடுக்கப்போகிறவர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.