ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வந்த சிவகார்த்திகேயனை, '3' படத்தின் மூலம் வௌ்ளித்திரைக்கு கொண்டு வந்தார் தனுஷ். ஆனால் அதற்கு முன்பாகவே பாண்டிராஜின் மெரினா படம் ரிலீஸாகிவிட்டது. ஆனாலும் தனுஷூடனான அவரது நட்பு வளர்ந்து கொண்டே போனது. சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களை தயாரித்தார் தனுஷ். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கும், தனுஷூக்கும் சண்டை என அதிகமாகவே செய்திகள் கிளம்பின. ஒரு கட்டத்தில் இருவருமே அப்படியெல்லாம் எதுவுமில்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு ஆகிப் போனது.
இந்நிலையில் தற்போது தனுஷ் மாரி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேப்போல் சிவகார்த்திகேயன், ரஜினி முருகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் இசை வௌியீட்டு விழாவும் வருகிற ஜூன் 7ம் தேதி ஒரேநாளில் ரிலீஸாக போவதாக செய்திகள் வௌியிட்டிருந்தோம். இப்போதும் படமும் ஒரேநாளில் ரிலீஸாக போவதாக தகவல் வௌியாகியுள்ளது. இருவரது படங்களும் ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறார்களாம். இதனால் முதன்முறையாக தனுஷூம், சிவகார்த்திகேயனும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.