மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி இடத்தை பிடிக்கும் மலையாள நடிகைகள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு என அப்படியே ரூட்டை மாற்றி டாப் கியரில் பாலிவுட் பக்கம் தாவி விடுகின்றனர். அதன்பின் அதிக சம்பளம் தருவதாக இருந்தாலும்கூட தமிழ் சினிமா பக்கமே தலைகாட்ட யோசிக்கும் இவர்கள், அளவான சம்பளம் தரும் மலையாள சினிமாவில் நடிக்கவா ஆர்வம் காட்டப்போகிறார்கள்.? தாய்மொழியாக இருந்தாலும் சம்பளம் குறைவு என்பதால் கால்ஷீட்டை காரணம் காட்டியே மலையாளப் படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.
இதற்கு கண்முன்னே அசின், நயன்தாரா என நடமாடும் சீனியர் உதாரணங்களும் உண்டு. அமலாபால், லட்சுமி மேனன், மியா ஜார்ஜ், கீர்த்தி சுரேஷ், என லேட்டஸ்ட் உதாரணங்களும் கூட உண்டு. இப்போது இவர்கள் வரிசையில் மலையாளத்தில் இருந்து புதிய வரவாக வந்துள்ளார் மஞ்சிமா மோகன். ஒரு வடக்கன் செல்பி படத்தில் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
அந்த சூட்டோடு மலையாளத்தில் அடுத்த வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்தவருக்கு கௌதம் மேனன் டைரக்சனில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க அழைப்பு வந்தால் மறுக்க முடியுமா என்ன.? உடனே ஒகே சொல்லிவிட்டார். ஆனால் “மற்றவர்கள் எப்படியோ தெரியாது.. எனக்கு மலையாள சினிமாவில் நடிப்பது தான் வசதியாக இருக்கிறது. அதனால் முழுநேரமும் இங்கேதான் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.. அந்தவிதமாக, வரும் நாட்களில் எனது ரூட்டையும் மாற்றிக்கொள்வேன்” என தாய்மொழி பாசத்தோடு பேசுகிறார் மஞ்சிமா மோகன்.