ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'அலைபாயுதே' படம் வந்த பிறகு பல இளம் பெண்களின் மனதை அலையாய் அடித்துச் சென்றவர் மாதவன். அப்படியே தமிழில் அடுத்த கமல்ஹாசன் ஆக உயர்வார் என்று பார்த்தால் அவரே அடித்துச் செல்லப்பட்டு விட்டார். 'அலைபாயுதே' படத்திற்குப் பிறகு அவருக்குப் பெயர் சொல்லும்படியாக அமைந்த ஒரே படம் 'ரன்' மட்டுமே. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகும் அவர் தன்னை தமிழில் தக்க வைத்து கொள்ள முயற்சிக்கவில்லை. அவ்வப்போது ஹிந்தியிலும் நடித்துக் கொண்டிருந்ததால் தமிழில் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களே இல்லாமல் போனது.
இப்போது 'தனு வெட்ஸ் மனு 2' படத்திற்கான பிரமோஷன் வேலைகளில பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் தமிழ்ப் படங்களில் விட்ட இடத்தைத் பிடிக்க ஆசைப்படுவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். “புதிய இயக்குனர்கள் பட்ஜெட்டுக்குள் படங்களை முடித்து விடுவார்கள் என்பது தெரியும். கார்த்திக் சுப்புராஜ் போன்ற இன்றைய தலைமுறை இயக்குனர்களுடனும் நடிக்க ஆசைப்படுகிறேன். அதோடு ஷங்கர் போன்றவர்களின் படங்களிலும் நடிக்க ஆசை, அவரால் மட்டுமே 'முதல்வன்' மாதிரியான படங்களையும் தர முடியும்,” என மீண்டும் தமிழ்ப் பக்கம் வருவதைப் பற்றிய அவருடைய ஆவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது 'இறுதிச் சுற்று' என்ற படத்தில் மாதவன் நடித்திருந்தாலும் அது முழுமையாக தமிழில் படமாக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனென்றால் அந்தப் படத்தை ஹிந்தியிலும் படமாக்கியிருக்கிறார்கள். ஹிந்தி ரசிகர்கள் டப்பிங் படங்களை விரும்ப மாட்டார்கள். எனவே, ஒரே நேரத்தில் தமிழிலும் தயாரித்திருப்பதாகச் சொல்லிவிட்டு ஹிந்தியில் மட்டுமே படமாக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது என அந்தப் படத்தைப் பற்றி கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். ஆக, மாதவன் நேரடியாக தமிழ்ப் படத்தில் நடித்தால் மட்டுமே விட்ட இடத்தைப் பிடிக்க முடியும்.