அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
ஹிந்தியில் தற்போது படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா விரைவில் தமிழ்ப் படங்களைத் தயாரிக்க உள்ளார் என்று சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்தப் படத்தில் பிரபுதேவாவே நாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. “கிரீடம், தாண்டவம், தெய்வத் திருமகள், தலைவா, சைவம், இது என்ன மாயம்” ஆகிய படங்களை இயக்கி உள்ள விஜய் இந்தப் படத்தை இயக்க உள்ளார். நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக இதை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
பிரபுதேவா தற்போது அக்ஷய் குமார் நடிக்கும் 'சிங் இஸ் பிளிங்' என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழில் கடைசியாக அவர் நடித்த 'களவாடிய பொழுதுகள்' படம் முடிவடைந்து சில ஆண்டுகள் ஆகியும் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இன்னும் வெளிவராமலே உள்ளது. பிரபுதேவா கடைசியாக கதாநாயகனாக நடித்து ஓரளவிற்கு வெற்றி பெற்ற படம் 'எங்கள் அண்ணா'. அந்தப் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். தனி நாயகனாக நடித்த 'அலாவுதீன்' படம் 2003ம் ஆண்டு வெளிவந்து, தோல்வியடைந்தது. 2005ம் ஆண்டில் தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 12 படங்களை இயக்கி விட்டார்.