மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நான் காதலிப்பதற்கு இன்னும் தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என நடிகை தமன்னா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, சில பிரச்னைகளால் தமிழ் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தார். அஜித்தின் வீரம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியான தமன்னா தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், காதல் பற்றி அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, பொதுவாக என்னை சந்திப்பவர்கள் எல்லாம் யாரையாவது காதலிக்கிறீர்களா..? எப்போது கல்யாணம் என்று கேட்கின்றனர். அது அவர்களது தப்பில்லை, ஏன்னென்றால் நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகிவிட்டது. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. ஏனென்றால் நான் காதலிக்க தகுதியானவர் இன்னும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு நபரை சந்தித்தால் நிச்சயம் அவரை காதலிப்பேன், அவர் யார் என்பதையும் கண்டிப்பாக சொல்வேன். தற்போதைக்கு நான் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.