ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோதே சினிமாவுக்கு வந்தவர் நடிகை லட்சுமி மேனன். கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனன், சுந்தரபாண்டியனில் தொடங்கி சமீபத்தில் வௌிவந்த கொம்பன் படம் வரை வெற்றி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கொம்பன் மற்றும் சிப்பாய் படங்களை முடித்து விட்டு கேரளா சென்றவர் அதன்பின் சினிமா என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு புத்தகமும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார். காரணம் ப்ளஸ் தேர்வுக்காக தீவிர படிப்பில் இறங்கினார். இதனால் சினிமாவுக்கு அவர் முற்றிலுமாக முழுக்கு போட்டுவிட்டதாக கூட ஒரு தகவல் வௌியானது. ஆனால் இதை மறுத்தார் லட்சுமி மேனன். தொடர்ந்து ஒரே மாதிரியாக நடித்து போரடித்து விட்டதும் என்றும், ப்ளஸ் தேர்வுக்காகவும் சினிமாவை சில காலம் தள்ளி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தசூழலில் தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வௌியாகியுள்ளன. இதேப்போல் கேரளாவிலும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வௌியாகி இருப்பதாகவும், லட்சுமி மேனன் 857 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், ஆனால் கணித பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்ததாகவும் மாலை முதல் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதுப்பற்றி லட்சுமி மேனன் தரப்பில் விசாரித்த போது, அது பொய்யான செய்தி என தெரியவந்தது. தற்போது லட்சுமி மேனன், வீரம் சிவா இயக்கத்தில், அஜித்தின் தங்கையாக நடிக்க இருக்கிறார் என்றும், இன்னும் அவருக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வௌியாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று லட்சுமி மேனன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி மேனன், 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த சமயத்திலும் அவர் பெயிலானதாக பொய்யான செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.