ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருப்பது எவ்வளவு பெரிய தலைவலி என்பதை தாணு இப்போது புரிந்து கொண்டிருப்பார். கேயார் தலைவராக இருந்தபோது....அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த விரக்தியில் இருந்தார் தாணு. அதன் காரணமாக கேயாரை செயல்படவிடாமல் வழக்குக்குமேல் வழக்குப்போட்டு அவரை செயல்படவிடாமல் முடக்கிப்போட்டார். பின்னர் அதையே காரணமாகச் சொல்லி தான் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பிறகு தினமும் பேச்சுவார்த்தை... பஞ்சாயத்து என அவரது பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் உத்தமவில்லன் படம் தொடர்பான பஞ்சாயத்தில்... அந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்த ஜஸ்வந்த்பண்டாரிக்கு எதிராக தாணு செயல்பட வேண்டியதாக இருந்திருக்கிறது. உத்தமவில்லன் படத்தை வெளியே கொண்டு வருவதற்காக அப்போது அவர் செய்த விஷயம்...தற்போது தாணுவுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. ரஜினியின் கால்ஷீட் கிடைத்ததும்... ஜஸ்வந்த் பண்டாரியை சந்தித்து அவரிடம் பெரும் தொகையை பைனான்ஸ் கேட்க சென்றிருக்கிறார் தாணு. உத்தமவில்லன் பஞ்சாயத்தில் அவர் நடந்து கொண்டவிதத்தினால் அப்ஸெட்டாகி இருந்த ஜஸ்வந்த் பண்டாரி தாணுவை சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். அதுமட்டுமல்ல, ரஜினி படத்துக்கு பைனான்ஸ் தர மாட்டேன் என்றும் சொல்லி விட்டாராம்.