ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நம்ம தமிழ் திரையுலகில் மேலே சொன்ன விஷயம் சாத்தியமா..? நிச்சயமாக இல்லை.. காரணம் தன்னை வைத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கூட, கொஞ்சம் சரிவை சந்தித்தால், அவருக்கு ஒரு படம் நடித்து தந்து அவரை கைதூக்கிவிடும் மனோபாவம் கொஞ்சம் கூட இங்கிருப்பவர்களிடம் இல்லை. ஆனால் 18 வருடமாக படம் இயக்காத ஒரு இயக்குனரை அழைத்து மோகன்லால் வாய்ப்பு தந்துள்ளார் என்றால் அவர் மீது மோகன்லால் எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார் பாருங்கள்..
அந்த இயக்குனரின் பெயர் பி.அனில். 25 வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து இயக்கிய 'அடிவேருகள்' என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் தான் இந்த அனில்.. மோகன்லாலை வைத்து மட்டுமே தொடர்ந்து நான்கு படங்களை இயக்கியுள்ள அனில் கடைசியாக 1997ல் சுரேஷ்கோபியை வைத்து, 'சூர்யகாந்தி' என்கிற படத்தை இயக்கியதோடு பீல்டை விட்டு ஒதுங்கியிருந்தார்.