சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
38 வயதில் ஹார்ட் அட்டாக் வருமா..? வந்திருக்கிறதே.. அதுதான் மலையாள நடிகரும், சிறந்த கதாசிரியருமான முரளிகோபியின் மனைவி அஞ்சனாவின் உயிரையும் பறித்துவிட்டது. 38 வயதான அஞ்சனா, ஸ்டேட் பாங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர். நேற்று வழக்கம்போல தங்களது இரு குழந்தைகளை ட்யூசன் சென்டரில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அஞ்சனாவுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு முன்பே உயிர் பிரிந்தது.
முரளிகோபி, அஞ்சனா தம்பதியினருக்கு பத்தாவது படிக்கும் கௌரி என்கிற மகளும் 2வது படிக்கும் கௌரவ் என்கிற மகனும் உள்ளனர். மறைந்த பிரபல நடிகர் பரத்கோபியின் மகன் தான் இந்த முரளி கோபி. பெரும்பாலும் மீடியாகுள் முன்போ, அல்லது விழாக்களிலோ முரளிகோபி குடும்பத்துடன் கலந்துகொண்டது இல்லை. தற்போதுதான் மிக பிஸியாக படங்களில் நடித்தும், கதை எழுதியும் வருகிறார் முரளிகோபி. இந்த இளம் வயதிலேயே அவரது மனைவியின் அதிர்ச்சி மரணம் அவரை மட்டுமல்ல, மலையாள திரையுலகையும் உலுக்கியுள்ளது. இன்று முற்பகல் அஞ்சனாவின் உடல் தகனம் செய்யப்படுகிறது.